trainவடக்கு புகையிரத வீதியில் புகையிரதம் ஒன்று தடம் புரண்டு இருந்த நிலையினை தொடர்ந்து புகையிரத போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டதுடன், இன்று போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளது.

கடந்த 14 ஆம் திகதி மாத்தறை தொடக்கம் வவுனியா வரை பயணித்த புகையிரதம், மதவாச்சி மற்றும் பரசன்கஸ்வேவக்கு இடையில் தடம் புரண்டதால் வடக்கு புகையிரத போக்குவரத்துக்கு தடங்கள் ஏற்பட்டது. இதன் காரணமாக, கொழும்பு கோட்டையில் இருந்து பயணிக்கும் புகையிரம் அனுராதபுரம் வரையும் யாழ்ப்பாணத்தில் இருந்து பயணிக்கும் புகையிரதம் மதவாச்சி வரையும் பயணித்தமை சுட்டிக்காட்டத்தக்கது.