mahinda desapriyaஉள்ளுராட்சிமன்ற தேர்தலுக்கான வேட்புமனு கோரும் தினம் எதிர்வரும் 27ஆம் திகதி அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

உள்ளுராட்சி மன்ற தேர்தல் குறித்து தேர்தல் ஆணைக்குழுவில் இன்றையதினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அதன் தலைவர் மகிந்த தேசப்பிரிய இதனை தெரிவித்தார். இந்த அறிவித்தல் வெளியிடப்பட்டு 14 தினங்களின் பின்னர் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். அறிவித்தல் விடுக்கப்பட்டு 17 அரை நாட்களுக்கு பின்னர் வேட்புமனு ஏற்றுக்கொள்ளல் நிறுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார். இதற்கமைய, வேட்புமனு கோரல் எதிர்வரும் டிசம்பர் மாதம் 11 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு அதே மாதம் 14 ஆம் திகதி மதியம் 12.00 மணியுடன் நிறைவுசெய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.