trainஇவ் வருடத்தின் இதுவரையான 10 மாத காலப் பகுதியில், ரயில் விபத்துக்களால், 180 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக, ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும், வருடா வருடம் ரயில் விபத்துக்கள் அதிகரித்து வருவதாக, அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன், குறித்த காலப் பகுதியில் ரயில் குறுக்கு வீதிகளில், வாகனங்களுடன் ரயில் மோதிய சம்பவங்கள் 84 இடம்பெற்றுள்ளதோடு, ரயிலில் இருந்து பயணிகள் விழுந்துள்ள சம்பவங்கள் 76 பதிவாகியுள்ளன. மேலும்,ரயில் வீதிகள் அல்லது ரயில் வீதிக்கு குறுக்காக பயணித்தமையால் ஏற்பட்ட விபத்துக்கள் 436 இடம்பெற்றுள்ளதாக, ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதுஇவ்வாறு இருக்க, வாகனங்கள் ரயில் குறுக்கு வீதிகளிலுள்ள வாயில்களில் மோதியமையால் ஏற்பட்ட பாதிப்பு சம்பவங்கள் 506 பதிவாகியுள்ளதாக அந்தத் திணைக்களம் கூறியுள்ளது. இதேவேளை, கடந்த 10 மாதங்களில் செல்பி எடுக்கும் முயற்சிகளால் ரயில் விபத்துக்களில் சிக்கி பலியான இளைஞர்களின் எண்ணிக்கை 24 என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே, ரயில் விபத்துக்களை குறைப்பதற்கான பல்வேறு வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், ரயில் குறுக்கு வீதிகளுக்கு அருகில் மக்களுக்கு தௌிவூட்டும் பதாகைகளை காட்சிப் படுத்தும் வேலைத் திட்டமும் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, ரயில்வே திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.