கண்டாவளை கமநல சேவை நிலையத்தில் ONUR திட்டந்தின் மூலம் கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலக பிரிவின் கீழ் உள்ள விவசாயிகளுக்கு வர்த்தகரீதியான உள்ளீடுகள் மற்றும் உபகரணங்கள் வழங்குதலும் மற்றும் கிணறுகள் கட்டி கொடுக்கப்பட்டது. இன் நிகழ்வில் பிரதம விருந்தினராக வட மாகாண விவசாய அமைச்சர் க.சிவனேசன் மற்றும் பிரதி விவசாயப் பணிப்பாளர் உலகநாதன் மற்றும் பாடவிதான உத்தியோகத்தர் (விவசாயம் ) மற்றும் விவசாய போதனாசிரியர்கள் மற்றும் பிரதேச செயலக பிரதிநிதிகள் மற்றும் பயனாளிகளும் கலந்து கொண்டனர்.