Header image alt text

IMG_1176 - Copyமேல்மாகாண சபையினுடைய விவசாய மற்றும் மீன்பிடி அமைச்சரும், துணை முதல்வரும், மேல்மாகாண சபையின் அவைத்தலைவர், பிரதி அவைத்தலைவர்,

மேல்மாகாண விவசாய மற்றும் மீன்பிடி அமைச்சின் செயலாளர் மற்றும் மேல்மாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோர் வட மாகாணத்தின் விவசாயம், கால்நடை அபிவிருத்தி போன்ற விடயங்களை ஆராயும் முகமாக மூன்று நாள் விஜயமொன்றினை மேற்கொண்டு அங்கு வருகை தந்துள்ளனர். இவர்களை வரவேற்கும் நிகழ்வில் வடமாகாண விவசாயமும் கமநல சேவைகளும், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், மீன்பிடி, நீர்வழங்கல் மற்றும் சுற்றாடல் அமைச்சர் க.சிவநேசன், Read more

IMG_1164 - Copyவட மாகாண மீன்பிடியை அபிவிருத்தி செய்யும் முகமாக வடமாகாண நிதியுதவியின் மூலம் முல்லைத்தீவு வவுனிக்குளத்தில் மீன்குஞ்சு விடும் நிகழ்வு நேற்றையதினம் (24.11.2017) இடம்பெற்றது.

நேற்று முற்பகல் 11.30அளவில் நடைபெற்ற இந்நிகழ்வில் வடமாகாண விவசாயமும் கமநல சேவைகளும், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், மீன்பிடி, நீர்வழங்கல் மற்றும் சுற்றாடல் அமைச்சர் க.சிவநேசன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டிருந்தார். இதன்போது கடற்றொழில் அமைச்சர் மகிந்த அமரவீர அவர்களின் அழகிய வீடு என்ற மீனவர்களுக்கான வீடுகளை அமைத்துக் கொடுக்கும் திட்டத்தின் முதற்கட்டமாக மீனவ சமூகத்தைச் சேர்ந்த இருபது பேருக்கு தலா 50ஆயிரம் ரூபா காசோலை வழங்கப்பட்டதோடு, மீனவர்களுக்கான காப்புறுதியும் வழங்கப்பட்டது. Read more

IMG_1091 - Copyமுல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணீரூற்று பகுதியில் யமஹா (YAMAHA) காட்சியகம் நேற்று வெள்ளிக்கிழமை (24.11.2017) திறந்து வைக்கப்பட்டது.

வடமாகாண விவசாயமும் கமநல சேவைகளும், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், மீன்பிடி, நீர்வழங்கல் மற்றும் சுற்றாடல் அமைச்சர் க.சிவநேசன் அவர்களால் நேற்று முற்பகல் 10.30மணியளவில் மேற்படி காட்சியகம் திறந்துவைக்கப்பட்டது. இந்நிகழ்வில் யமஹா நிறுவன நிர்வாகிகள், முல்லைத்தீவு மாவட்ட சமுர்த்தி ஆணையாளர், பிரதேச பொலிஸ் அதிகாரிகள், வர்த்தகப் பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தார்கள். Read more

addsadsaஇலங்கையின் முதலாவது நனோ தொழில்நுட்பத்திலான செயற்கைக்கோள் எதிர்வரும் 2020ஆம் ஆண்டு விண்ணுக்கு செலுத்த திட்டமிட்டுள்ளதாக சீனாவின் சின்ஹ_வா செய்தி வெளியிட்டுள்ளது.

அதன்பொருட்டு இலங்கை சார்பில் ஆதர்சி க்ளாக் மத்திய நிலையம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தேவையான தொழில்நுட்பம், ரோபோ தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில் நுட்பம் தொடர்பில் நிபுணர்களின் ஒத்துழைப்பை பெற்று கொள்ளும் பொருட்டு ரஷ்யாவுடன் இலங்கை உடன்படிக்கை கைச்சாத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more

dssயாழ். பருத்தித்துறை பகுதியில் உழவு இயந்திரத்தினால் மோதி நபர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

பருத்தித்துறை முதலாம் கட்டை பகுதியைச் சேர்ந்த சிதம்பரப்பிள்ளை சிவபாலன்( வயது 48) என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். பேக்கரி உரிமையாளரான இவர் இன்று அதிகாலை 1.45 மணியளவில் அவரது நண்பர்களுடன் மதுபானம் அருந்திக் கொண்டிருந்துள்ளார். அதன்போது ஏற்பட்ட தகராறின் பின்னர், அவர் அங்கிருந் சென்ற சமயம், அவரது எதிரியான உழவு இயந்திர சாரதி, உழவு இயந்திரத்தினால் மோதி கொலை செய்துள்ளார். Read more

zimbabwe-new-president-Lரொபர்ட் முகாபே பதவி விலயதை அடுத்து சிம்பாப்வேயின் புதிய ஜனாதிபதியாக எமர்சன் மனங்காக்வா நேற்று பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். தலைநகர் ஹராரேயில் நடைபெற்ற நிகழ்வில் அவர் ஜனாதிபதியாக பதவியேற்றதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த 37 வருடங்களாக ஆட்சியிலிருந்த ரொபர்ட் முகாபே அண்மையில் பதவி விலகியதை அடுத்து துணை ஜனாதிபதியாக இருந்த எமர்சன் பதவியேற்றார். Read more

egypt-blast-Lஎகிப்தில் இடம்பெற்ற குண்டு தாக்குதல் மற்றும் துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 184 பேர் வரை பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எகிப்தின் வடக்கு சினாய் மாகாணத்தில் உள்ள அல் ராவ்தா மசூதி அருகே நேற்று வாகனத்தில் வந்த 4 தீவிரவாதிகள் சக்தி வாய்ந்த குண்டுகளை வெடிக்க வைத்தனர்.

மேலும், துப்பாக்கி மூலம் மசூதிக்கு வெளியே இருந்தவர்களை குறிவைத்து சரமாரியாக தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் இதுவரை 184 பேர் பலியானதாக முதற்கட்ட தகவல்கள் வெளியானது. Read more

arrest (17)யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கடையுடைப்பு மற்றும் வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய இளைஞரை கோப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர். கொக்குவில் கிழக்கு கொக்குவில் பகுதியைச் சேர்ந்த அன்ரனி மெறிக்சன் யூட் (18) என்ற இளைஞரே சந்தேகத்தின் பேரில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் அண்மையில் கோப்பாய் பகுதியில் கடையொன்று உடைக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடைத் தொகுதியில் பொருத்தப்பட்டிருந்த சீ.சி.ரி.வி காணொளியின் அடிப்படையிலேயே கோப்பாய் பொலிஸார் குறித்த இளைஞரை கைது செய்துள்ளனர். Read more

housing schmeவடக்கு, கிழக்கில் 50 ஆயிரம் கல் வீடுகளை அமைக்கும் திட்டத்தின் கேள்விப்பத்திரங்களுக்கான மதிப்பீட்டுப் பணிகள் துரிதப்படுத்தபடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய நல்லிணக்கம் மற்றும் ஒருமைப்பாட்டு அமைச்சின் செயலாளர் வீ.சிவஞானசோதி தெரிவித்தார். இதேவேளை, வடக்கு, கிழக்கில் வீதிகளை நிர்மாணிப்பதற்கான வேலைத்திட்டத்துக்கான கேள்விபத்திர கோரலுக்கான விளம்பரப்படுத்தல் விரைவில் இடம்பெறவுள்ளதாகவும் அமைச்சின் செயலாளர் வீ.சிவஞானசோதி தெரிவித்தார்.

election meetஉள்ளுராட்சி மன்றங்களின் தேர்தல் தொடர்பிலான எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு இன்று கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ளவுள்ளது. மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம் மொஹமட் தெரிவித்துள்ளார்.

தேர்தல் திணைக்களத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நடத்தப்படுவது தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய விடயங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்படும் எனவும் எம்.எம் மொஹமட் குறிப்பிட்டுள்ளார்.