IMG_1164 - Copyவட மாகாண மீன்பிடியை அபிவிருத்தி செய்யும் முகமாக வடமாகாண நிதியுதவியின் மூலம் முல்லைத்தீவு வவுனிக்குளத்தில் மீன்குஞ்சு விடும் நிகழ்வு நேற்றையதினம் (24.11.2017) இடம்பெற்றது.

நேற்று முற்பகல் 11.30அளவில் நடைபெற்ற இந்நிகழ்வில் வடமாகாண விவசாயமும் கமநல சேவைகளும், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், மீன்பிடி, நீர்வழங்கல் மற்றும் சுற்றாடல் அமைச்சர் க.சிவநேசன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டிருந்தார். இதன்போது கடற்றொழில் அமைச்சர் மகிந்த அமரவீர அவர்களின் அழகிய வீடு என்ற மீனவர்களுக்கான வீடுகளை அமைத்துக் கொடுக்கும் திட்டத்தின் முதற்கட்டமாக மீனவ சமூகத்தைச் சேர்ந்த இருபது பேருக்கு தலா 50ஆயிரம் ரூபா காசோலை வழங்கப்பட்டதோடு, மீனவர்களுக்கான காப்புறுதியும் வழங்கப்பட்டது. மேற்படி நிகழ்வில் மாகாண நீர்வள முகாமைத்துவ பணிப்பாளர், உத்தியோகத்தர்கள், மாவட்ட உத்தியோகத்தர்கள், தொழில்நுட்ப அலுவலர்கள்; மற்றும் பிரதேச செயலகத்தின் நிர்வாக சபை உத்தியோகத்தர், ஊர்ப் பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தார்கள்.

IMG_1099 IMG_1101 IMG_1103 IMG_1104 IMG_1107 IMG_1109 IMG_1112 IMG_1114 IMG_1115 IMG_1116 IMG_1118 IMG_1119 IMG_1123 IMG_1131 IMG_1134 IMG_1136 IMG_1139 IMG_1141 IMG_1143 IMG_1144 IMG_1146 IMG_1150 IMG_1152 IMG_1153 IMG_1155 IMG_1157 IMG_1159 IMG_1163 IMG_1164 IMG_1165 IMG_1167 IMG_1168 IMG_1169 IMG_1170