drown in waterவவுனியாவில் நேற்று பிற்பகல் குளத்தில் குளிக்கச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நேற்று பிற்பகல் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் ஒன்றினைந்து குளிப்பதற்காக குளக்கரைக்குச் சென்றுள்ளனர். குளக்கரை ஓரத்திலிருந்து குறித்த நால்வரும் தண்ணீர் தட்டி விளையாடிக் கொண்டிருந்த போது திருமணமாகி இரண்டு மாதங்களேயான 26 வயதுடைய ஜெயபிரதாப் என்ற இளைஞனும் எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள 16 வயதுடைய பாணுரேகா என்ற மாணவியும் குளத்தின் ஆழத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர். Read more