sfdfdfdfயாழ்ப்பாணம் காக்கை தீவு பகுதியில் ஒரு தொகுதி ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. பத்து T56- துப்பாக்கிகளும், 3 கைக்குண்டுகளும், 100க்கு மேற்பட்ட துப்பாக்கி ரவைகளும் மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட ஆயுதங்கள் அனைத்தும் உக்கிய நிலையில் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றுக் காலை நடைபெற்ற இந்த ஆயத மீட்புப் பணியில் விசேட அதிரடிப்படை மற்றும் பொலிசார் ஈடுபட்டிருந்தனர். மாவீரர் வார காலப்பகுதியில் குறித்த மீட்பு நடவடிக்கை இடம்பெற்றதால் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.