Header image alt text

svxvcகிழக்கு மாகாண சபையினால் வழங்கப்பட்ட பட்டதாரிகள் ஆசிரியர் நியமனத்தில் தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும், அறிவிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர் நியமன விண்ணப்ப அறிவுறுத்தலுக்கு மாறாக நியமனம் வழங்கப்பட்டதை கண்டித்தும் மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்றுகாலை முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக ஒன்றுகூடிய மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர். 40 புள்ளிகளுக்கு மேல் பெற்ற அனைவருக்கும் நியமனம் வழங்கு, எங்கள் கண்ணீருக்கு நீதிவேண்டும், அரசியல்வாதிகளே சிந்தியுங்கள், இன்று நாங்கள் தெருவில் நாளை நீங்கள் தெருவில், பரீட்சையிலும் சித்தி, நேர்முக தேர்விலும் சித்தி ஏன் நாங்கள் இன்னும் வீதி ஓரத்தில் போன்ற சுலோகங்களை தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். Read more

lanka pakistanஇலங்கை – பாகிஸ்தான் நட்புறவு, வர்த்தக மற்றும் முதலீட்டு சங்கத்தின் பிரதிநிகள் பாகிஸ்தானிய உயர் ஸ்தானிகர் கலாநிதி ஷாஹித் அஹ்மத் ஹஷ்மத்தை பாகிஸ்தானிய உயர் ஸ்தானிகராலயத்தில் இன்று சந்தித்துள்ளனர்.

கடந்த 1950 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட இலங்கை – பாகிஸ்தான் நட்புறவு, வர்த்தக மற்றும் முதலீட்டு சங்கமானது, இலங்கையின் பழைமையான சங்கங்களிலுள் ஒன்றாகும். இச்சங்கம் இலங்கை மற்றும் பாகிஸ்தானிற்கிடையில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கான பயனுள்ள அமைப்பாக தன்னை நிலைநிறுத்தியிருக்கின்றது. Read more

nominationவடக்கில் உள்ளூராட்சிசபை தேர்தல் இடம்பெறவுள்ள ஒரே ஒரு நகரசபையான சாவகச்சேரி நகர சபையில் போட்டியிடும் பொருட்டு ஈழ மக்கள் ஜனநாயக கட்சி கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகத்தில் இக்கட்டுப்பணம் இன்றையதினம் செலுத்தப்பட்டுள்ளது. இருபத்தொரு உறுப்பினர்களைக் கொண்ட யாழ் சாவகச்சேரி நகரசபை தேர்தலில் போட்டியிட விண்ணப்பங்கள் யாழ் மாவட்ட தேர்தல் திணைக்களத்தினால் கோரப்பட்டுள்ளது. Read more

studentஅரசாங்க பாடசாலைகளில் உள்வாங்கப்படும் அனைத்து மாணவர்களினதும் அடையாளத்தை உரிய முறையில் உறுதி செய்யவும், பரீட்சை நடவடிக்கையின் போது, பரிட்சார்த்திகள் சார்ந்த விடயங்களை அதிகாரிகள் இலகுவாக அறிந்து கொள்வதற்காகவும், புதிய நடைமுறையொன்று முன்மொழியப்பட்டுள்ளது.

பரீட்சைகள் திணைக்களத்தின் நடவடிக்கைகளை மேலும் விரிவுபடுத்துவதற்கான ஆலோசனைகளை முன்வைக்க, புத்தி ஜீவிகளை கொண்ட குழுவொன்றை, கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் நியமித்திருந்தார். இந்த குழுவினராலேயே, குறித்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. Read more

ஒ-1வவுனியா கணேசபுரத்தில் சிறுமியொருவர் பாலியல் துஷ்பிரயோத்திற்கு உட்படுத்தப்பட்டமைக்கு நீதிகோரி இன்று கண்டனப் பேரணி நடத்தப்பட்டது.

வவுனியா பொலிஸ் நிலைய முன்றலில் ஆரம்பமான பேரணி மாவட்ட செயலகம் வரை முன்னெடுக்கப்பட்டு வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜரொன்றும் கையளிக்கப்பட்டது. பெண்கள் மீதான வன்முறைகளை தடுக்க வேண்டும் மற்றும் ஆண்களும் இது தொடர்பில் தமது பங்களிப்பை வழங்க வேண்டுமென குறித்த மகஜரில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. Read more