Header image alt text

P1470063 - Copyபுளொட் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் தனது பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத் திட்ட நிதியிலிருந்து யாழ். தெல்லிப்பழையிலுள்ள யா/தந்தை செல்வா தொடக்க நிலைப்பள்ளிக்கு ஒரு தொகுதி கதிரைகளை வழங்கிவைத்துள்ளார்.

பாடசாலையின் அதிபர் திரு. வாமதேவன் அவர்களின் தலைமையில் நேற்றுக்காலை 10மணியளவில் பாடசாலை மண்டபத்தில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் பாடசாலையின் ஆசிரியர்களும் ஆசிரியைகளும் கலந்து சிறப்பித்திருந்தார்கள். Read more

Australian high commisionner north chiefவடக்கின் நிலைமைகள் தொடர்பாக ஆராயும் முகமாக அவுஸ்திரேலியாவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் பீரின் கஸ்ரன் அடங்கிய குழுவினர் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

யாழ் கைதடியிலுள்ள வடமாகாண முதலமைச்சரின் அலுவலகத்தில் இந்த சந்திப்பு இன்று இடம்பெற்றுள்ளது. சமகால அரசியல் நிலவரங்கள் தொடர்பாக இக்குழு முதலமைச்சருடன் கலந்துரையாடியதுடன் அவுஸ்திரேலிய அரசின் நிதியுதவியில் வடமாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டுவருகின்ற அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும் குறித்த தூதுக்குழுவினர் முதலமைச்சருக்கு விளக்கமளித்துள்ளனர்.

koriaதென்கொரியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் அந்நாட்டு ஜனாதிபதி முன் ஜே இன் க்கும் இடையில் உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று இடம்பெற்றுள்ளது.

சியோல் நகரில் அமைந்துள்ள புளு ஹவுஸ் ஜனாதிபதி இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது ஜனாதிபதிக்கு விசேட இராணுவ மரியாதை வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பின்னர் இரு தரப்பு உறவுகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. இதன்போது ஐந்து உடன்படிக்கைகளும் கைச்சாத்திடப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

maithripalaநாட்டை பிளவடையச் செய்யாத அரசியல் தீர்வின் ஊடாக நாட்டை அபிவிருத்தி செய்யும் வகையில், அனைத்து சமுகங்களுக்கு இடையிலும் நம்பிக்கையையும், சகோதாரத்துவத்தையும் கட்டியெழுப்ப நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

தென்கொரியா சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அங்குள்ள இலங்கையர்களை சந்தித்து உரையாற்றிய போது இந்த விடயத்தைக் கூறியுள்ளார். சமஸ்டி அடிப்படையில் தீர்வினை வழங்குவதற்கு நாம் தயாராக இல்லை. அத்துடன் இராணுவத்தையோ, தேசியப் பாதுகாப்பையோ பலவீனப்படுத்தும் நோக்கில் நாட்டைப் பொறுப்பேற்கவில்லை என்றும் கூறினார்.

gotabayaபொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்குத் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவுக்கு, மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று இந்த தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

arrest (17)நியூஸிலாந்துக்கு செல்லும் நோக்கில் புத்தளம் உடப்பு கடற்பகுதியில் தங்கியிருந்ததாக கூறப்படும் மூன்று இளைஞர்கள் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டு, பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் உடப்பு பகுதியைச் சேர்ந்த 21 வயது மதிக்கத்தக்க இளைஞர்கள் எனத் தெரியவந்துள்ளது. இன்று அதிகாலை இவர்களைக் கைதுசெய்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். உடப்பு கடற் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் எட்டுப் பேர் இருப்பதை அவதானித்த கடற்படையினர், அவர்களை கைதுசெய்ய முற்பட்ட போது, ஐவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். Read more

voters listஇம்முறை வாக்காளர் பட்டியலில் தமது பெயர் இல்லையாயின் அல்லது தகுதியற்ற ஒருவரின் பெயர் உள்ளடக்கப்பட்டிருப்பின், டிசம்பர் 5ம் திகதிக்கு முன்னர் தெரியப்படுத்துமாறு, தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

மேலும், விரைவில் நடைபெறவுள்ள 93 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களுக்காக, இவ் வருடத்திற்கான வாக்காளர் பட்டியலே பயன்படுத்தப்படவுள்ளதாக, சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறித்த பட்டியல் தற்போது மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளால், சம்பந்தப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் எனவும், அவர்கள் கூறியுள்ளனர். Read more

rohithaகிழக்கு மாகாணத்தில் கல்வித்துறை பின்னடைந்து காணப்படுவதை தான் விரும்பவில்லை எனவும் புதிதாக நியமனம் பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள், இடமாற்றங்களைப் பெற்றுத்தருமாறு கோரி வர வேண்டாம் எனவும் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகம கோரிக்கை விடுத்துள்ளார்.

கிழக்கு மாகாண சபையில் இன்று நடைபெற்ற மக்கள் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்தார். கிழக்கு மாகாணத்தில் புதிதாக நியமனம் பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள், தங்களுக்கு வழங்கப்பட்ட பாடசாலைகளுக்குக் கடமைக்குச் செல்லுமாறும் அவர் கோரினார். Read more

ruwan vijewardenaவடக்கில் நேற்று புலிகளை நினைவுகூர்ந்தவர்கள் தொடர்பில் பயங்கரவாத விசாரணைப் பிரிவு விசாரணைகளை முன்னெடுக்கும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன தெரிவித்துள்ளார்.

பியகமவில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்குமபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், Read more