koriaதென்கொரியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் அந்நாட்டு ஜனாதிபதி முன் ஜே இன் க்கும் இடையில் உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று இடம்பெற்றுள்ளது.

சியோல் நகரில் அமைந்துள்ள புளு ஹவுஸ் ஜனாதிபதி இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது ஜனாதிபதிக்கு விசேட இராணுவ மரியாதை வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பின்னர் இரு தரப்பு உறவுகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. இதன்போது ஐந்து உடன்படிக்கைகளும் கைச்சாத்திடப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.