Australian high commisionner north chiefவடக்கின் நிலைமைகள் தொடர்பாக ஆராயும் முகமாக அவுஸ்திரேலியாவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் பீரின் கஸ்ரன் அடங்கிய குழுவினர் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

யாழ் கைதடியிலுள்ள வடமாகாண முதலமைச்சரின் அலுவலகத்தில் இந்த சந்திப்பு இன்று இடம்பெற்றுள்ளது. சமகால அரசியல் நிலவரங்கள் தொடர்பாக இக்குழு முதலமைச்சருடன் கலந்துரையாடியதுடன் அவுஸ்திரேலிய அரசின் நிதியுதவியில் வடமாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டுவருகின்ற அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும் குறித்த தூதுக்குழுவினர் முதலமைச்சருக்கு விளக்கமளித்துள்ளனர்.