சீரற்ற வானிலை காரணமாக 55,855 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 13 மாவட்டங்களில் 14 ,617 குடும்பங்களைச் சேர்ந்தவர்களே பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, சீரற்ற வானிலை காரணமாக 8 பேர் காணாமற்போயுள்ளனர். இன்று காலை 6 மணி வரையான காலப்பகுதியில் 7 பேர் சீரற்ற வானிலையால் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. பதுளை மற்றும் பண்டாரவளையைச் சேர்ந்த 02 பேரும், ஹிக்கடுவ மற்றும் அம்பலங்கொட பகுதிகளைச் சேர்ந்த 4 பேரும் கொஸ்கொட பகுதியைச் சேர்ந்த ஒருவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது. Read more