sri lanka europen unionஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இலங்கைக்கும் இடையில் முதலீடுகள் மற்றும் வர்த்தகத்தை ஊக்குவிக்கும் வகையிலான நான்காவது கலந்துரையாடல், கொழும்பில் இடம்பெற்றுள்ளது.

இந்தக் கலந்துரையாடலில் ஜேர்மனி, பிரான்ஸ், நெதர்லாந்து, பிரித்தானியா உட்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். இந்த கலந்துரையாடலின்போது, இலங்கையில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் முதலீடுகளை ஊக்குவிப்பது தொடர்பாக தீவிரமாக கலந்துரையாடப்பட்டுள்ளது. அதற்கான முன்னெப்புக்களை மேற்கொள்ளவும் இரண்டு தரப்புக்கள் இணங்கியுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.