வவுனியா வாணி அருணோதயா முன்பள்ளியின் 7ம் ஆண்டு கலை நிகழ்வுகள் திரு. எஸ். தயாளன் தலைமையில் 04.11.2017 (ஞாயிற்றுக்கிழமை) வவுனியா நகரசபை மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வின் முதன்மை விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் திரு ந. சிவசக்தி ஆனந்தன் அவர்களும் சிறப்பு அதிதிகளாக சிறி ரெலோ அமைப்பின் தலைவர் திரு. பா.உதயராசா முன்னால் வடக்கு மாகாணசபை உறுப்பினர் திரு. செந்தில்நாதன் மயூரன், நகரசபையின் முன்னாள் உப நகர பிதாவாகிய திரு.க.சந்திரகுலசிங்கம்(மோகன்), அரசினர் தமிழ் கலவன் பாடசாலை அதிபர் திரு.செல்லத்துரை வேதநாதன், முஸ்லிம் தேசிய பாடசாலை அதிபர் திரு.ரம்ஸீன், சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர் திரு கெனடி, தமிழ் விருட்சத்தின் தலைவர் திரு சந்திரகுமார் கண்ணண் மற்றும் ஆசிரியர்கள் பெற்றோர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து நிகழ்வை சிறப்பித்தனர்.