Header image alt text

IMG_3812 - Copyவவுனியா வேலன்குளம் கிராம சேவகர் பிரிவில் இளைஞர்களின் முயற்சியால் 07 கிராமங்களுக்காக இளைஞர்களால் மக்கள் பங்களிப்பில் நிர்மாணிக்கப்பட்ட பொதுமக்களுக்கான பொது நூல் நிலையத்தின் திறப்பு விழா நியூ லைன் இளைஞர் கழகத்தின் ஒழுங்கமைப்பில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

மக்கள் பங்களிப்புடன், தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் அமைச்சின் வழிகாட்டலின் கீழ் தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும் இலங்கை இளைஞர் கழக சம்மேளனமும் இணைந்து இளைஞர் பாராளுமன்றத்திற்கு ஒதுக்குகின்ற நிதியின் கீழ் Youth with Talent மக்கள் அபிவிருத்தி வேலைத்திட்டம் நாடாளாவிய ரீதியில் இளைஞர் கழகங்கள் ஊடாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. Read more

sdfsfsdயாழ்ப்பாண நீதிமன்ற வளாகத்தில் 242 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்படவுள்ள திறந்த நீதிமன்றங்களின் கட்டடத் தொகுதிக்கான அடிக்கல்லை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் இன்று காலை நாட்டியுள்ளார்.

இந்த நிகழ்வில் யாழ்ப்பாணம் மாவட்ட நீதிபதி ஜே.கஜநிதிபாலன், யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சி.சதீஸ்தரன், யாழ்ப்பாணம் தொழில் நியாய சபையின் தலைவர் தாரணி கணேசானந்தன் அரச சட்டவாதி நாகரட்ணம் நிஷாந்த், யாழ்ப்பாணம் சட்டத்தரணிகள் சங்கத் தலைவி ஜனாதிபதி சட்டத்தரணி சாந்தா அபிமன்னசிங்கம், யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றப் பதிவாளர் மீரா வடிவேற்கரசன், சட்டத்தரணிகள் மற்றும் நீதிமன்ற உத்தியோகத்தர்கள் பங்கேற்றனர். Read more

711094360mahinda-desa-Lஉள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதியோ அல்லது அதற்கு முன்னரோ நடத்தப்படும் என தேர்தல் ஆணைக்குழு தலைவர் அறிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார். தேர்தல் நடைபெறும் தினம் ஞாயிறு அல்லது அரச விடுமுறையாக அல்லாத ஒரு தினத்தில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டார். 97 சபைகளில் இருந்த அச்சு பிழைகள் காரணமாக மீண்டும் குறித்த சபைகளை வர்த்தமானியில் உள்ளிட வேண்டிய நிலை ஏற்பட்டது. Read more

image_6b38c86f62யாழ்ப்பாணம் உயர்நீதிமன்றில் கிடப்பில் காணப்படும் வழக்குகளை துரிதப்படுத்தி இரண்டு வருடங்களுக்குள் தீர்ப்பினை வழங்கவுள்ளதாக உயர்நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியன் அறிவித்துள்ளார்.

யாழ்- உயர்நீதிமன்றில் பாரிய குற்றங்கள் தொடர்பான 50 வழக்குளை எதிர்வரும் இரண்டு வருடங்களுக்குள் விசாரித்து தீர்ப்பளிக்கவுள்ளதாக சட்டமா அதிபரிடம் தான் உறுதியளித்துள்ளதாக நீதிபதி இளஞ்செழியன் இன்று தெரிவித்துள்ளார். யாழ் மேல்நீதிமன்றத்திற்கு புதிய கட்டடம் ஒன்றை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் வைபவத்தில் இன்று கலந்துகொண்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். Read more

kumaran-pathmanadanகே.பி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன் வெளிநாடு செல்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது. குமரன் பத்மநாதனுக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தாக்கல் செய்திருந்த மனுவை நிராகரித்து நீதிமன்றம் இந்த அனுமதியை வழங்கியுள்ளது.

பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய முP-யை கைது செய்யுமாறு பொலிஸ் மா அதிபருக்கு எழுத்தாணை கட்டளை பிறப்பிக்கக் கோரி விஜித ஹேரத் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார். எவ்வாறாயினும், விசாரணை நடத்தும் அளவிற்கு சட்ட அடிப்படை இல்லையெனத் தீர்மானித்து மேன் முறையீட்டு நீதிமன்றம் மனுவை நிராகரித்துள்ளது. Read more