பொதுவுடைமைகள் சட்டத்தின் கீழ் கைது செய்வதை தடுக்கக் கோரி முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்த மனு மீதான இடைக்கால தடையுத்தரவு மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் விடுக்கப்பட்ட இடைக்கால தடையுத்தரவே எதிர்வரும் ஜனவரி 25 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. அவர் மீது தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கே குறித்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.