உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கோரும் அறிவித்தல் வெளியானது முதல் நேற்று வரையான காலப்பகுதியில் தேர்தல் சம்பந்தப்பட்ட நான்கு முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
குறித்த முறைப்பாடுகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கடந்த 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் வெலிகேபொல, பலாங்கொடை, கம்பஹா ஆகிய பொலிஸ் பிரிவுகளிலேயே குறித்த முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன எனவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.