உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­த­லுக்­கான வேட்­பு­ம­னுக்­கோரும் அறி­வித்தல் வெளி­யா­னது முதல் நேற்று வரை­யான காலப்­ப­கு­தியில் தேர்தல் சம்­பந்­தப்­பட்ட நான்கு முறைப்­பா­டுகள் பதி­வா­கி­யுள்­ள­தாக பொலிஸ் தலை­மை­யகம் தெரி­வித்­துள்ளது.

குறித்த முறைப்­பா­டு­க­ளுடன் தொடர்­பு­டை­ய­வர்கள் என்ற சந்­தே­கத்தின் பேரில் இருவர் கைது­செய்­யப்­பட்­டுள்­ளனர். கடந்த 11 மற்றும் 12 ஆம் திக­தி­களில் வெலி­கே­பொல, பலாங்­கொடை, கம்­பஹா ஆகிய பொலிஸ் பிரி­வு­க­ளி­லேயே குறித்த முறைப்­பா­டுகள் பதி­வு­செய்­யப்­பட்­டுள்­ளன எனவும் பொலிஸ் தலை­மை­யகம் தெரி­வித்­துள்­ளது.