அவுஸ்ரேலியாவில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட 29 இலங்கையர்களில் 4 பேர் எதிர்வரும் 24ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் நேற்று மினுவாங்கொட நீதவான் நீதிமன்றில் முன்னிலை செய்யப்பட்டபோதே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

எஞ்சிய 25 பேரையும் 10 ஆயிரம் ரூபா வீதம் ரொக்கப் பிணையிலும் ஒரு லட்சம் ரூபா வீதம் சரீரப் பிணையிலும் செல்ல நீதவான் அனுமதியளித்தார். கடந்த நவம்பர் மாதம் 17ஆம் திகதி தங்காலை குடாவெல்ல கடற்பகுதியில் இருந்து இவர்கள் அவுஸ்ரேலியாவுக்கு படகு மூலம் சென்றுள்ளனர். இந்நிலையில் அவர்கள் நேற்று முன்தினம் மீண்டும் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டனர்.