Header image alt text

வவுனியா தாண்டிக்குளம் கிராம சேவகர் பிரிவில் தமிழ் தேசிய இளைஞர் கழகத்தினால் கிராம மக்களின் வெள்ளப்பாதிப்பை கட்டுப்படுத்தும் முகமாக இளைஞர்களினால் முன்னெடுக்கப்பட்ட மக்களுக்கான வெள்ளப்பாதிப்பை குறைக்கும் முகமான பிரதான வடிகால் அகலமாக்கும் செயற்றிட்டத்தை மக்களுக்கு கையளிக்கும் நிகழ்வு அண்மையில் தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் தலைவர் திரு. சு.காண்டீபன் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

மக்கள் பங்களிப்புடன், தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் அமைச்சின் வழிகாட்டலின் கீழ் தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும் இலங்கை இளைஞர் கழக சம்மேளனமும் இணைந்து இளைஞர் பாராளுமன்றத்திற்கு ஒதுக்குகின்ற நிதியின் கீழ் Youth with Talent மக்கள் அபிவிருத்தி வேலைத்திட்டம் நாடாளாவிய ரீதியில் இளைஞர் கழகங்கள் ஊடாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. Read more

இலங்கையிலிருந்து தேயிலை இறக்குமதி செய்வதை தற்காலிகமாக தடை செய்ய ரஷ்யா எடுத்த தீர்மானம் தொடர்பில் கலந்துரையாட, மூன்று அமைச்சர்கள் கொண்ட குழுவொன்று அடுத்தவாரம் ரஷ்யா பயணமாக உள்ளது. ஆங்கில ஊடகமொன்று இதனைத் தெரிவித்துள்ளது.

பெருந்தோட்டத்துறை அமைச்சர் நவீன் திஸாநாயக்க, வர்த்தகத்துறை அமைச்சர் ரிஷாத் பதியுதீன், விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைச்சர் சுஸில் பிரேமஜயந்த ஆகியோரே இந்தக் குழுவில் அடங்குகின்றனர். Read more

இலங்கைக்கான சீன தூதுவர் சியான்லியாங், (லுi ஓயைடெயைபெ) தமது பதவிக்காலம் முடிவடைந்தநிலையில் எதிர்வரும் திங்கட்கிழமை நாடு திரும்பவுள்ளதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த 2015 பெப்ரவரி 24ஆம் திகதி இலங்கைக்கு வந்த ஹீ ஸியாங்லியானின், கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகளாக இலங்கைக்கான சீன தூதுவராக செயற்பட்டுள்ளார். தமது பதவிக்காலத்தில் பல்வேறு திட்டங்களை அவர் செய்து முடித்துள்ளார். ஹீ ஸியாங்லியான், இலங்கையில் மிகவும் செல்வாக்கு மிக்க சீன பிரதிநிதியாக பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more

இலங்கையின் தேயிலை மற்றும் விவசாயப் பொருட்களுக்கு ரஷ்யாவினால் விதிக்கப்பட்ட தடையை நீக்குமாறு, அந்த நாட்டுப் ஜனாதிபதியிடம் கோரவுள்ளதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஹப்புத்தலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டுள்ளார். இலங்கையில் இருந்து ரஷ்யாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட தேயிலைகளில், ஒருவகை பூச்சியினம் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. Read more

இரண்டாம் கட்டமாக 248 உள்ளுராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுக் கோரல் நாளை ஆரம்பிக்கப்படவுள்ளது. இதற்கமைய, நாளை நண்பகல் 12 மணிக்கு ஆரம்பமாகும், வேட்புமனு கையேற்புக்கான காலம், எதிர்வரும் 21 ஆம் திகதியுடன் நிறைவடைய உள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்துள்ளார்.

அத்துடன், கடந்த 4ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட கட்டுப்பணம் செலுத்துவதற்கான கால அவகாசம், எதிர்வரும் 20 ஆம் திகதியுடன் முடிவடைய உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். Read more