இரண்டாம் கட்டமாக 248 உள்ளுராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுக் கோரல் நாளை ஆரம்பிக்கப்படவுள்ளது. இதற்கமைய, நாளை நண்பகல் 12 மணிக்கு ஆரம்பமாகும், வேட்புமனு கையேற்புக்கான காலம், எதிர்வரும் 21 ஆம் திகதியுடன் நிறைவடைய உள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்துள்ளார்.

அத்துடன், கடந்த 4ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட கட்டுப்பணம் செலுத்துவதற்கான கால அவகாசம், எதிர்வரும் 20 ஆம் திகதியுடன் முடிவடைய உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். கடந்த 14 ஆம் திகதி வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட 93 உள்ளுராட்சி மன்றங்கள் தவிர்ந்த, 248 உள்ளுராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுத்தாக்கலே ஆரம்பமாகவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.