Header image alt text

அனைத்து உள்ளூராட்சி மன்றங்களுக்குமான தேர்தல் எதிர்வரும் பெப்பிரவரி மாதம் 10ஆம் திகதி நடைபெறும் என தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.

தேர்தல்கள் திணைக்களத்தில் நடைபெறும் ஊடகவியலாளர் சந்திப்பில் தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய இதனை தெரிவித்தார். இதேவேளை 248 உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களைப் பொறுப்பேற்கும் நடவடிக்கை இன்று ஆரம்பமாகியது. Read more

கடற்றொழில் மற்றும் நீரியல்வள அபிவிருத்தி அமைச்சின் புதிய செயலாளரான ஜகத்.பீ.விஜேவீர இன்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.

இலங்கை நிர்வாக சபையின் சிரேஷ்ட அதிகாரியான இவர் இதற்கு முன்னர் சட்டம் மற்றும் ஒழுங்குகள் அமைச்சின் செயலாளராகவும், குடிவரவு-குடியகல்வு திணைக்களம் மற்றும் இலங்கை சுங்கப் பணியகம் உள்ளிட்ட நிறுவனங்களில் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள மலேசியப்பிரதமர் நஜீப் ரஸாகிற்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதி அலுவலகத்திற்கு வருகை தந்திருந்த மலேசியப் பிரதமரை ஜனாதிபதி மகிழ்ச்சியுடன் வரவேற்றார். 21 பீரங்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டு, இராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் இவ்வரவேற்பு இடம்பெற்றது. இலங்கைக்கும் மலேசியாவுக்கும் இடையில் இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டு 60 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, மலேசியப் பிரதமரின் இவ்விஜயம் இடம்பெறுவதுடன், Read more

யாழ்ப்பாணம் மாநகர சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக வடக்கு மாகாண சபை உறுப்பினர் இம்மானுவேல் ஆர்னோல்ட் வடக்கு மாகாண சபை உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளதாக வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

இவ் விடயம் தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், தனது பதவி விலகல் கடிதத்தை வடக்கு மாகாண சபை உறுப்பினர் இம்மானுவேல் ஆர்னோல்ட் கடந்த 14 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக எம்மிடம் கையளித்துள்ளார்.பதவி விலகல் முறைப்படியாக எம்மால் ஏற்றுக்கொள்ளப்பட்டு தேர்தல் ஆணையாளருக்கு முறைப்படி இப் பதவி விலகல் தொடர்பான அறிவித்தலை அனுப்பி வைக்குமாறு பேரவை செயலாளருக்கு பணிப்புரை வழங்கியுள்ளேன். Read more

செங்கலடி மத்திய கல்லூரிக்கு அருகிலுள்ள கால்வாயிலிருந்து இன்றுகாலை சடலமொன்று மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொம்மாந்துறை திருவள்ளூர் வீதியில் வசிக்கும் 3 பிள்ளைகளின் தந்தையான 37 வயதுடைய சின்னத்துரை விமலநாதன் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்றுமாலை தனது வீட்டிலிருந்து துவிச்சக்கர வண்டியில் சென்றிருந்த நபர் வீடு திரும்பாத நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். Read more

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக உயிரிழந்தவரின் உடலத்தை யாரும் இதுவரை பொறுப்பேற்கவில்லை என முறைபாடு செய்யப்பட்டுள்ளது.

நேற்று உயிரிழந்த குறித்த நபரின் உடலத்தை இதுவரை யாரும் பொறுப்பேற்க வரவில்லையெனத் தெரிவித்து வைத்தியசாலை அதிகாரிகளால் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் இன்று முறைபாடு செய்யப்பட்டுள்ளது. Read more

மீதமிருக்கின்ற 248 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்பு மனுக்களை கோரல், இன்று முதல் எதிர்வரும் 21ஆம் திகதி வரையிலும் இடம்பெறும்.

இறுதிநாளான 21ஆம் திகதியன்றே, தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 20 நாட்களில் ஒருவகை காய்ச்சல் காரணமாக 9 பேர் மரணமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விடயத்தினை வடமாகாண சுகாதார அமைச்சர் ஞானசீலன் குணசீலனை உறுதிப்படுத்தியுள்ளார்.

அவர்கள் ஒருவகை வைரஸ் தாக்கத்தினாலேயே உயிரிழந்துள்ளதாகவும், அவற்றுள் பெருபாலானோர் இன்ஃபுலுவன்சா வைரஸ் தாக்கதினாலேயே உயிரிழந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். எனவே குறித்த வைரஸ் தொடர்பில் கொழும்பில் உள்ள மருத்துவமனைகளுக்கு அறிவிக்கப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மன்னார் பேசாலை கடற்பரப்பில் காணாமல் போன கடற்தொழிலாளர்களில் ஒருவர் இராமேஸ்வரம் கடல்பகுதியில் வைத்து மீட்கப்பட்டுள்ளார்.

மன்னார் பேசாலை பகுதியில் இருந்து நேற்றுக்காலை கடற்தொழிலுக்காக சென்ற இரு கடற்தொழிலாளர்கள், வீடு திரும்பவில்லை என அவர்களது உறவினர்களால் பேசாலை காவல் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டிருந்தது. Read more

தமி­ழீழ விடு­தலை புலி­களால் புதைக்­கப்­பட்­டுள்­ள­தாக கூறப்­படும் தங்­கத்தை தேடும் முக­மாக பெகோ இயந்­திரம் ஒன்­றினை திருடி வந்து, கைவி­டப்­பட்ட முகாம் ஒன்றின் அருகில் அகழ்வுப் பணி­களை முன்­னெ­டுத்த முன்னாள் புலிகள் இயக்க உறுப்­பினர் உள்­ளிட்ட மூவர் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்.

முல்லைத்தீவு, புதுக்குடி­யி­ருப்பு பொலிஸ் பிரிவில் இந்த சம்­பவம் இடம்­பெற்­றுள்­ள­தா­கவும் சந்­தேக நபர்கள் நேற்று கைது செய்­யப்­பட்­ட­தா­கவும் பொலிஸார் தெரி­வித்­தனர். புதுக்குடி­யி­ருப்பு விசு­வ­மடு பகு­தியில் நபர் ஒருவர் கிணறு வெட்­டு­வ­தற்­காக பெகோ இயந்­திரம் ஒன்­றினை அப்­ப­கு­திக்கு கொண்டு சென்­றுள்ளார். Read more