கடற்றொழில் மற்றும் நீரியல்வள அபிவிருத்தி அமைச்சின் புதிய செயலாளரான ஜகத்.பீ.விஜேவீர இன்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.

இலங்கை நிர்வாக சபையின் சிரேஷ்ட அதிகாரியான இவர் இதற்கு முன்னர் சட்டம் மற்றும் ஒழுங்குகள் அமைச்சின் செயலாளராகவும், குடிவரவு-குடியகல்வு திணைக்களம் மற்றும் இலங்கை சுங்கப் பணியகம் உள்ளிட்ட நிறுவனங்களில் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.