தமி­ழீழ விடு­தலை புலி­களால் புதைக்­கப்­பட்­டுள்­ள­தாக கூறப்­படும் தங்­கத்தை தேடும் முக­மாக பெகோ இயந்­திரம் ஒன்­றினை திருடி வந்து, கைவி­டப்­பட்ட முகாம் ஒன்றின் அருகில் அகழ்வுப் பணி­களை முன்­னெ­டுத்த முன்னாள் புலிகள் இயக்க உறுப்­பினர் உள்­ளிட்ட மூவர் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்.

முல்லைத்தீவு, புதுக்குடி­யி­ருப்பு பொலிஸ் பிரிவில் இந்த சம்­பவம் இடம்­பெற்­றுள்­ள­தா­கவும் சந்­தேக நபர்கள் நேற்று கைது செய்­யப்­பட்­ட­தா­கவும் பொலிஸார் தெரி­வித்­தனர். புதுக்குடி­யி­ருப்பு விசு­வ­மடு பகு­தியில் நபர் ஒருவர் கிணறு வெட்­டு­வ­தற்­காக பெகோ இயந்­திரம் ஒன்­றினை அப்­ப­கு­திக்கு கொண்டு சென்­றுள்ளார். இந் நிலையில் இரவு வேளையில் அந்த பெகோ இயந்­தி­ரத்தை அவர் விசு­வ­மடு அதி­சய விநா­யகர் ஆலயம் அருகே நிறுத்தி வைத்­துள் ளார். இதன்­போது திருட்டு திறப்­பொன்­றினை பயன்­ப­டுத்தி அந்த பெகோ இயந்­தி­ரத்தை அங்­கி­ருந்து திருடிச் சென்­றுள்ள சிலர், முன்னர் விடு­தலை புலி­களின் முகாம் இருந்­த­தாக கூறப்­படும் இடத்தில் அகழ்வுப் பணி­களில் ஈடு­பட்­டுள்­ளனர்.

பெகோ இயந்­தி­ரத்தை காணாது உரி­மை­யாளர் பொலிஸில் முறை­யி­டவே, அது தொடர்பில் விசா­ரணை செய்த நிலையில் முன் னாள் விடு­தலை புலி உறுப்­பி­னரும் ஏனைய இரு­வரும் தங்கம் தேடி அகழ்வுப் பணி­களில் ஈடு­பட்­டி­ருந்த போது கைதுசெய்­யப்­பட்­டனர். கைதுசெய்­யப்­பட்­ட­வர்கள் 23 வயதுக்கும் 34 வயதுக்கும் இடைப்பட்டவர்களாவர். விசாரணைகளை புதுக்குடியி ருப்பு பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.