சட்டவிரோதமாக இலங்கைக்குள் கொண்டுவரப்பட்ட ஒரு தொகை அலைபேசிகள் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை டுபாய் மற்றும் சீனாவில் இருந்து வந்த 3 இலங்கையர்களிடம் இருந்தே இவை கைப்பற்றப்பட்டதாக விமான நிலைய சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர்களிடம் இருந்து 2000 அதிகமான அலைபேசிகள் மீட்கப்பட்டதாகவும், இதன் பெறுமதி 60 இலட்சம் ரூபாய் எனவும் சுங்க அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.