நிலவும் வளிமண்டல குழப்பநிலை காரணமாக இன்றும் மழை பெய்யக்கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. கிழக்கு, சப்ரகமுவ, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களுக்கும் மற்றும் களுத்துறை மாவட்டத்தின் சில பிரதேசங்களிலும் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடுமென கூறப்பட்டுள்ளது.

நாட்டின் தென் மற்றும் தென்கிழக்கு பகுதிகளின் ஆழமான கடற்பிரதேசங்களில் காற்றின் வேகம் 70 தொடக்கம் 80 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என்பதால் கடற்றொழிலாளர்கள் அவதானத்துடன் செயற்படவேண்டும் என தேசிய அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவி பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி கோரிக்கை விடுத்துள்ளார்.