2017 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் ஆயிரத்து 520 இலங்கை ஏதிலிகள் நாடு திரும்பியுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் இலங்கை முகவரகம் இந்தத் தகவலை நேற்று வெளியிட்டுள்ளது. 619 குடும்பங்களைச் சேர்ந்த குறித்த இலங்கை ஏதிலிகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உதவியுடன் தமிழகத்திலிருந்து பாதுகாப்பாக இருப்பிடங்களுக்கு திரும்பியுள்ளதாக இலங்கை முகவரகம் குறிப்பிட்டுள்ளது. இந்த நடவடிக்கையை மேற்கொள்ள தமக்கு உதவியளித்த பங்காளர்கள் அனைவருக்கும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் இலங்கைக்கான முகவரகம் நன்றி தெரிவித்துள்ளது.