தேசிய அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு அதனைப் பெற்றுக் கொடுப்பதற்கு ஆட்பதிவு திணைக்களத்தினால் விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் சுமார் 3 லட்சம் வாக்காளர்கள் அடையாள அட்டை இல்லாதிருக்கின்றமை தெரியவந்துள்ளது. பிறப்புக்குறிப்பு மற்றும் வதிவிடத்தை உறுதிசெய்யும் ஆவணம் இல்லாத காரணத்தினாலேயே இந்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, அவ்வாறானவர்களுக்கு உடன் அடையாள அட்டைகளை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் இக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. இதுவரை 1000 பேருக்கு தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.