Header image alt text

தெற்கு பிலிப்பைன்ஸில் வீசும் ´டெம்பின்´ என்னும் வெப்பமண்டல புயலால் குறைந்த பட்சம் 74 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புயல் பிலிப்பைன்ஸின் மிதனாவோ தீவை தாக்கியதுடன் அங்கு வெள்ளத்தையும், நிலச்சரிவையும் ஏற்படுத்தியுள்ளது. டூபோட் மற்றும் பியகபோ ஆகிய இரு நகரங்களும் மோசமாக பாதிக்கப்பட்டதுடன் பல வீடுகள் பாறைகளால் புதையுண்டன. மணிக்கு 80 கிலோமீட்டர் வரையிலான வேகத்துடன் வீசிய காற்று, இப்போது மிதனாவோவை கடந்து மேலும் மேற்கு நோக்கி நகரும் முன்பு பலாவான் என்ற பகுதியின் தெற்கு முனையில் மையம் கொண்டுள்ளது Read more

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோபூர் மாவட்டம் துபி பகுதியில் இந்த விபத்து நடந்துள்ளது.

துபி பகுதியில் உள்ள பனாஸ் ஆற்று பாலத்தில் பயணித்த பேருந்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் தடுப்பு சுவரை உடைத்துக்கொண்டு ஆற்றுக்குள் கவிழ்ந்தது. இதுகுறித்து காவல்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டது. Read more

வில்பத்து விளாத்திகுளம் பகுதியில் சட்டவிரோத காடழிப்பு இடம்பெற்றுள்ளதாக, இது சம்பந்தமாக மேற்கொள்ளப்பட்ட விஷேட ஆய்வு அறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த காடழிப்பு சம்பந்தமாக ஜனாதிபதி உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சூழலியளாலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். வில்பத்து காடழிப்பு சம்பந்தமாக ஆய்வு செய்வதற்கு ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட விஷேட குழுவினால் தயாரிக்கப்பட்ட 136 பக்கங்களை கொண்ட விஷேட ஆய்வு அறிக்கை அண்மையில் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளிக்கப்பட்டது. Read more

உள்ளூராட்சிமன்றங்களுக்கான தேர்தல் தொடர்பிலான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், இன்றுக்காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்துக்குள் ஒரு முறைப்பாடு மட்டுமே கிடைத்துள்ளது. கடந்த 9ஆம் திகதி முதல் நேற்று வரையிலும் 16 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more

வாக்காளர் இடாப்பில் பெயர் பதியப்பட்டுள்ள போதிலும் தேசிய அடையாள அட்டை இல்லாதவர்கள் சுமார் 03 இலட்சம் வரையில் இருப்பதாக ஆட்பதிவுத் திணைக்களம் கூறியுள்ளது.

அடையாள அடடைக்காக விண்ணப்பிக்கும் போது பிறப்புச் சான்றிதழ் உள்ளிட்ட தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்காமையின் காரணமாக அவர்களுக்கு தேசிய அடையாள அட்டையை பெற்றுக் கொள்ள முடியாதுள்ளதாக திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானா குணதிலக கூறினார். Read more

ஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் அறிவிப்புக்கு எதிராக, இலங்கை உள்ளிட்ட 128 நாடுகள் எதிராக வாக்களித்துள்ளன.

டிரம்ப்பின் அறிவிப்புக்கு எதிராக, ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் யோசனை கொண்டுவரப்பட்டது. அந்த யோசனைக்கு, 128 நாடுகள் ஆதரித்து வாக்களித்தன. 35 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. 9 நாடுகள் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. இதேவேளை ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தில் ஜெருசலேம் தொடர்பான அமெரிக்காவின் தீர்மானத்துக்கு எதிரான யோசனைக்கு ஆதரவாக வாக்களித்தது ஏன் என்பது தொடர்பில் இலங்கை அரசாங்கம் விளக்கமளித்துள்ளது. Read more

போதைப்பொருள் கடத்தலில் முக்கியமானதொரு கேந்திர நிலையமாக இலங்கை உள்ளதென தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது.

2017 ஆம் ஆண்டுக்கான அதன் வருடாந்த அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் மற்றும் இந்தியா முதலான நாடுகளிலிருந்து கடத்தல்மூலம் கொண்டுவரப்படும் போதைப்பொருட்கள், கொழும்பு மற்றம் மாலே ஊடாக ஐரோப்பிய நாடுகளுக்கு கடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more

இன்று அதிகாலை நாட்டை உலுக்கிய கோர விபத்து -“,இரத்தினபுரி பத்துல்பஹன பகுதியில் தனியார் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 2 பேர் பலியாகியுள்ளனர்.

அத்துடன், 44 பேர் காயமடைந்துள்ளனர். பத்துல்பஹன பகுதியில் இன்று அதிகாலை 2.30 அளவில் இந்த விபத்து இடம்பெற்றதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். ஊருபொக்கவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த குறித்த பேருந்து வீதியை விட்டு விலகிச் சென்று 30 அடி பள்ளத்தில் வீழ்ந்து தொடங்கொட வாவியில் விபத்துக்குள்ளானது. Read more