யாழ். ஊர்காவற்றுறை கண்ணகி அம்மன் துறைமுகத்தில் நேற்றுமாலை 05.00 மணியளவில் எழுதாரகை படகு பயணத்தின் ஆரம்ப நிகழ்வு நடைபெற்றது.

எழுவைதீவு – அனலைதீவு ஆகிய தீவுகளில் வசிக்கும் 453 குடும்பங்களின் நன்மை கருதி அரசினால் 1130 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட புதிய படகு சேவை தொடக்கி வைக்கப்பட்டது. வட மாகாண ஆளுநர் றெஜினோல்குரே இதனை ஆரம்பித்து வைத்தார். இந்த நிகழ்வில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் வேதநாயகம், ஆளுநரின் செயலாளர் இளங்கோவன், பிரதேச செயலாளர் மஞ்சுளா, உதவி அரசாங்க அதிபர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.