ஐ.நா.வின் மனித உரிமை விசா­ரணை அதி­காரி தங்கள் நாட்­டுக்குள் நுழைய மியன்மார் தடை விதித்­துள்­ளது. மியன்­மாரில் ரக்கைன் மாகா­ணத்தில் ரோஹிங்யா முஸ்­லிம்கள் மீது நடத்­தப்­பட்­ட­தாகக் கூறப்­படும் தாக்­கு­தல்கள் உட்­பட, மியன்­மாரின் மனித உரி­மைகள் குறித்து ஆய்வு நடத்­து­வ­தற்­காக விசா­ரணை அதி­காரி யாங்ஹீ லீ மியன்மார் செல்ல இருந்தார்.

ஆனால், அவர் தனது பணியைச் செய்யும் போது நடு­நி­லை­யாக இல்­லா­ததால் மியன்­மா­ருக்கு வர தடை விதிக்­கப்­பட்­டுள்­ள­தாக அரசு கூறி­யுள்­ளது. ரக்­கைனில் ஏதோ மோச­மான செயல் நடக்­கி­றது என்­பதை தனக்கு தடை விதிக்­கப்­பட்ட முடிவு காட்­டு­கி­றது என யாங்ஹீ லீ கூறி­யுள்ளார்.அண்­மையில் ரக்­கைனில் ஒரு கிரா­மத்தில் உள்ள புதை­கு­ழியில் 10 உடல்கள் கண்­டெ­டுக்­கப்­பட்­ட­தாக மியன்மார் அதி­கா­ரிகள் கூறி­யுள்­ளனர். மேலும், கடந்த ஜூலை மாதம் மியன்­மா­ருக்கு சென்ற யாங்ஹீ லீ, மியன்­மாரில் ரோஹிங்யா முஸ்­லிம்கள் நடத்­தப்­படும் விதம் குறித்து கவ­லை­ தெரிவித்திருந்தார்.

அத்­துடன், தன்­னு­டைய பய­ணத்­துக்கு தடை விதித்து மியன்மார் எடுத்­துள்ள முடிவு, தனக்கு குழப்­பத்­தையும் ஏமாற்­றத்­தையும் அளித்­துள்­ள­தாக லீ கூறி­யுள்ளார். முன்­ன­தாக அவர் பல முறை மியன்­மா­ருக்கு பயணம் செய்ய அனு­மதி வழங்­கப்­பட்­டி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது. லீயின் பணி ஒரு­த­லை­ப்பட்­ச­மாக இருப்­ப­தாலும், அவர்மீது நம்பிக்கை இல்லாததாலும் அவருக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மியன்மார் அரசு செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.