எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் யாழ். மாவட்டத்தில் போட்டியிடும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் வேட்பாளர்களில் ஒரு பகுதியினரை புளொட் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் தனது கந்தரோடை இல்லத்திற்கு அழைத்து கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டிருந்தார்.

இன்றுமுற்பகல் இடம்பெற்ற இந்த சந்திப்பின்போது தேர்தல் சம்பந்தமான விளங்கங்கள் வழங்கப்பட்டதோடு, தேர்தல் பிரச்சாரங்களை எவ்வாறு முன்னெடுப்பது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் விரிவாக கலந்துரையாடப்பட்டது. இக் கலந்துரையாடலில் மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் அவர்களும் கலந்துகொண்டிருந்தார்.