Header image alt text

சுனாமி ஆழிப்பேரலை ஏற்பட்டு இன்றுடன் பதின்மூன்று வருடங்கள் நிறைவடைகின்றன. 2004ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ம்திகதி ஏற்பட்ட சுனாமிப்பேரலை காரணமாக இலங்கையில் 40ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களின் உயிர்கள் காவுகொள்ளப்பட்டன.

இந்தோனேசியாவின் சுமாத்திரா தீவுகளின் ஆழ்கடலில் ஏற்பட்ட நிலநடுக்கம் 9.0 ரிச்டர் அளவில் பதிவாகியதுடன், இந்தப் பூமியதிர்ச்சி கடலில் நூற்றுக்கணக்கான அடி உயரத்தில் அசுர அலைகளை உருவாக்கியது. இலங்கையில் முதலில் கல்முனையைத் தாக்கிய பேரலை குறுகிய நேரத்திற்குள் திருமலை, மட்டக்களப்பு, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை உள்ளிட்ட 14 கரையோர மாவட்டங்களை தாக்கியது. Read more

அடுத்த வருடம் பெப்ரவரி 10ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான அனைத்து பிரசாங்களும் பெப்ரவரி மாதம் 7ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவுக்கு வருகின்றது. 7ஆம் திகதி நள்ளிரவுக்குப் பின்னர் பிரசார நடவடிக்கைகளுக்கு தடைவிதித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இதேவேளை எதிர்வரும் உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் களமிறங்கும் வேட்பாளர்களுள் 10 வீதமானோருக்கு தேசிய அடையாள அட்டை இல்லையென தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. குறித்த வேட்பாளர்கள் அடையாள அட்டைக்குப் பதிலாக கடவுச்சீட்டு மற்றும் ஏனைய உறுதிப்படுத்தல் ஆவணங்களை சமர்ப்பித்துள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் குறிப்பிட்டுள்ளது.

கொழும்பு காலிமுகத்திடல் பகுதியில் அமைந்துள்ள பேரவெவையை அண்மித்து சட்டவிரோதமான முறையில் தங்கிருந்த சிலர் அப்பகுதியிலிருந்து அகற்றப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, குறித்த பகுதியில் தங்கியிருந்த 850 குடும்பங்களை சேர்ந்தவர்கள் அப்பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு வெளியேற்றப்பட்டவர்களுக்கு மாற்று இடங்கள் வழங்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் ஜகத் முனசிங்க குறிப்பிட்டுள்ளார்.