கொழும்பு காலிமுகத்திடல் பகுதியில் அமைந்துள்ள பேரவெவையை அண்மித்து சட்டவிரோதமான முறையில் தங்கிருந்த சிலர் அப்பகுதியிலிருந்து அகற்றப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, குறித்த பகுதியில் தங்கியிருந்த 850 குடும்பங்களை சேர்ந்தவர்கள் அப்பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு வெளியேற்றப்பட்டவர்களுக்கு மாற்று இடங்கள் வழங்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் ஜகத் முனசிங்க குறிப்பிட்டுள்ளார்.