எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலை அண்மித்ததாக தேர்தல் சட்டதிட்டங்களை மீறியமைத் தொடர்பில் இதுவரை 65 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதில் சுவரொட்டிகளை ஒட்டியமை மற்றும் தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் 49பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், பதாகைகள் மற்றும் வேட்பாளர் இலக்கங்களை வாகனங்களில் காட்சிப்படுத்திச் சென்ற 12பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.