வட கொரியா தொடர்பான ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் தீர்மானங்களை முழுமையாக நடைமுறைப்படுத்துவது குறித்து இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையில் இணக்கம் வெளியிடப்பட்டுள்ளது.

ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் டாரோ கொனோ மற்றும் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் திலக் மாஹாரப்பனவை சந்தித்து கலந்துரையாடிய போதே இந்த இணக்கம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன், ஐக்கிய நாடுகளின் தீர்மானங்களை முழுமையாக நடைமுறைப்படுத்தலில் உள்ள அவசியம் குறித்தும் அவர்களுக்க இடையில் கலந்துரையாடப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.