Header image alt text

தேர்தல் சட்ட திட்­டங்­களை மீறி­யமை தொடர்பில் நேற்றுக் காலை 6.00 மணி­யுடன் நிறை­வ­டைந்த 24 மணி நேரத்தில் 11 பேரை பொலிஸார் கைது செய்­துள்­ளனர். குறித்த காலப்­ப­கு­திக்குள் பொலிஸார் முன்­னெ­டுத்த 6 சுற்றிவளைப்­புக்­களில், 5 நட­வ­டிக்­கை­களின் போது இந்த 11 பேரும் கைது செய்­யப்பட்­ட­தாக பொலிஸ் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன் குன­சே­கர தெரி­வித்தார்.

கட்டான பொலிஸ் பிரிவில் 3 பேரும், பல்­லே­கலை பொலி­ஸாரால் மூவரும், கண்டி பொலி­ஸாரால் ஒரு­வரும், வரக்­கா­பொல பொலி­ஸாரால் மூவரும், கொச்­சி­கடை பொலி­ஸாரால் ஒரு­வ­ரு­மாக இவ்­வாறு கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். Read more

யாழ்ப்பாணம் புத்தூர் – மீசாலை வீதியில் பட்டம் விட்டுக் கொண்டிருந்தபோது, பட்டத்திற்கு பொருத்தியிருந்த மின்சார வயர் வீதியால் சென்ற பிரதான மின்வடத்துடன் உரசுண்டதில், ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்றுமாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில், புத்தூர் கிழக்கு பகுதியினை சேர்ந்த 19வயதான பாஸ்கரன் டர்சன் என்ற இளைஞனே பலியாகியுள்ளதாக, அச்சுவேலி பொலிஸார் கூறியுள்ளனர். உயர்தரத்தில் கல்வி பயலும் இந்த இளைஞன் சக நண்பர்களுடன் இணைந்து பட்டம் ஏற்றியுள்ளார். Read more