தேர்தல் சட்ட திட்டங்களை மீறியமை தொடர்பில் நேற்றுக் காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 11 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த காலப்பகுதிக்குள் பொலிஸார் முன்னெடுத்த 6 சுற்றிவளைப்புக்களில், 5 நடவடிக்கைகளின் போது இந்த 11 பேரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குனசேகர தெரிவித்தார்.
கட்டான பொலிஸ் பிரிவில் 3 பேரும், பல்லேகலை பொலிஸாரால் மூவரும், கண்டி பொலிஸாரால் ஒருவரும், வரக்காபொல பொலிஸாரால் மூவரும், கொச்சிகடை பொலிஸாரால் ஒருவருமாக இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். Read more