ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலம் 5 வருடங்களா அல்லது 6 வருடங்களா என்பதை தீர்மானிப்பதற்காக ஐந்து நீதியரசர்களைக் கொண்ட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

தலைமை நீதியரசர் பிரியசாத் டெப்பின் தலைமையில் இவர் அடங்கலாக இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. இதில் நீதியரசர்களான ஈவா வனசுந்தர, புவனெக அலுவிகாரை, கே.டீ.சித்ரசிறி, சிசிர அப்ரு ஆகியோர் இந்தக் குழுவில் அங்கம் வகிக்கின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.