தேர்தல் சட்ட மீறல்கள் மற்றும் தேர்தல் தொடர்பான முறைபாடுகள் தொடர்பில் இதுவரை 135 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 14பேர் வேட்பாளர்கள் ஆவர். கடந்த டிசம்பர் 09ஆம் திகதியிலிருந்து 42 தேர்தல் சட்டமீறல்கள் பதிவாகியுள்ளதுடன், இவ்விடயம் தொடர்பில் 92பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் 06 வேட்பாளர்கள் உள்ளடங்குகின்றனர். மேலும், தேர்தல் தொடர்பில் இதுவரை 90 முறைபாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இவ்விடயம் தொடர்பில் 43 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 08 வேட்பாளர்களும் உள்ளடங்குவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.