2018 முதல் 2019ஆம் ஆண்டு காலப்பகுதிக்கான இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராக முன்னாள் தலைவரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான உதய ரொஹான்டி சில்வா மீண்டும் தெரிவாகியுள்ளார்.

நேற்றையதினம் இடம்பெற்ற அந்த சங்கத்தின் தேர்தலின் போது எந்தவொரு போட்டியாளரும் முன்னிலையாகத காரணத்தினால் போட்டியின்றி முன்னாள் தலைவர் மீண்டும் அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். அதன் செயலாளராக சட்டத்தரணி கௌசல் நவரத்ன நியமிக்கப்பட்டுள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.