மட்டக்களப்பு – மண்டூர் பொலிஸ் பிரிவில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் ஸ்தலத்திலே பலியாகியுள்ளார்.

மதுவரித் திணைக்களத்தில் கடமைபுரியும் ஒரு வயதுக் குழந்தையின் தந்தையான கிருஷ்ணப்பிள்ளை வாசன் (33) என்பவரே இவ் விபத்தில் பலியானார் என மண்டூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுணதீவு இலுப்படிச்சேனையிலிருந்து மோட்டார் சைக்கிலில், அம்பாறைக்கு கடமைக்காக சென்றவேளையில் மண்டூர் வீதியில் வைத்து பஸ்வண்டியில் மோதுண்டதில் இவர் ஸ்தலத்திலே பலியானமை இங்கு குறிப்பிடத்தக்கது.