எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தல் தொடர்பில் ஏழாயிரம் கண்காணிப்பாளர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெப்ரல் அமைப்பு இதனை தெரிவித்துள்ளது. இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றின்போது அதன் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி இவ்வாறு தெரிவித்துள்ளார். இதுவரை தேர்தல் தொடர்பில் 243 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.