முல்லைத்தீவு நந்திக்கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடி வலைகளைக் கைப்பற்றியுள்ளதாக முல்லைத்தீவு கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்களம் தெரிவித்துள்ளது.

சுமார் 20 இலட்சம் ரூபா பெறுமதியான சட்டவிரோத மீன்பிடி வலைகள் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன. முல்லைத்தீவு கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்களம் பொலிஸாருடன் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சட்டவிரோத மீன்பிடி வலைகள் மீட்கப்பட்டுள்ளன. நந்திக்கடல் பகுதியில் ஒருசில மீனவர்கள் சட்டவிரோத மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தி கடற்றொழிலில் ஈடுபடுவதால் இறால், மீன், நண்டு இனங்கள் அழிவடையும் அபாயம் ஏற்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.