மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சிங்கப்பூர் பிரதமர் லீ ஷியன் லூங் இன்று மாலை இலங்கை வந்தடைந்துள்ளார். 35 தூதுவர்கள் அடங்கிய குழுவொன்றுடனேயே அவர் இலங்கை வந்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பை ஏற்று, இலங்கை வந்துள்ள சிங்கப்பூர் பிரதமர் லீ ஷியன் லூங், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதோடு, சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமருடனான சந்திப்பின் போது இருநாட்டு வர்த்தக பொருளாதாரம் குறித்து அதிக கவனம் செலுத்தப்படவுள்ளதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.