திருகோணமலை தோப்பூர் களப்புக் கடலில் சுமார் 600 இற்கும் அதிகமான மீனவர்கள் கடற்றொழிலில் ஈடுபடுகின்றனர். இறங்குதுறை இன்மையால், நீண்ட காலமாக பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கியுள்ளதாக இந்த மீனவர்கள் குறிப்பிடுகின்றனர்.

அத்துடன், மீன்பிடி உபகரணங்களை பாதுகாத்தல் உள்ளிட்ட செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான ஓய்வு மண்டபம் இல்லாமையும் இவர்கள் எதிர்நோக்கும் மற்றொரு பிரச்சினையாகவுள்ளது.