வேதன முரண்பாட்டிற்கு தீர்வு காணுமாறு கோரி சுங்க அதிகாரிகள் சங்கம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். கொழும்பில் அமைந்துள்ள சுங்க தலைமையகத்திற்கு முன்னால் இன்று இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.

உரிய தீர்வு கிடைக்காவிடின் எதிர்காலத்தில் தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் லால் வீரகோண் தெரிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.