ரயில் சாரதிகளும் ரயில் பாதுகாப்பாளர்களும் ஆரம்பித்த பணிப்பகிஷ்கரிப்பு இடைநிறுத்தப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரயில் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ள ரயில்களை சேவையில் ஈடுபடுத்தாதிருக்க தீர்மானித்துள்ளதாக ரயில் சாரதிகள் சங்கம் அறிவித்துள்ளது. இந்த பிரச்சினை தொடர்பில் இன்று பகல் ரயில் பொது முகாமையாளர் உள்ளிட்ட போக்குவரத்து உத்தியோகத்தர்களுடன் கலந்துரையாடல் நடைபெற்றதாகவும் சங்கத்தின் தலைவர் இந்திக்க தொடங்கொட குறிப்பிட்டுள்ளார்.