இலங்கை வந்துள்ள ஜப்பானின் வர்த்தக மற்றும் தொழில்துறை குழுவினர் இன்று பிற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளனர்.

ஜனாதிபதியின் வாசஸ்தலத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது. இலங்கையில் புதிய வர்த்தக மற்றும் முதலீட்டு வாய்ப்புக்களை ஆராய்வதற்காக குறித்த ஜப்பானின் வர்த்தக மற்றும் தொழில்துறை குழுவினர் இலங்கை வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.