மதவாச்சியில் இருந்து தலைமன்னாருக்கு இடையிலான தொடரூந்து சேவை இரண்டு மாதங்களுக்கு தற்காலிமாக இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அந்த தொடரூந்து நிலையங்கள் இடையே உள்ள பாலம் ஒன்றின் புனரமைப்பு பணி இதற்கு காரணம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரை இந்த தொடரூந்து சேவை இடைநிறுத்தப்படவுள்ளது.