எவ்வித இடையூறு வந்தாலும் எதிர்வரும் 30ம் திகதி பரந்தளவிலான வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கூறியுள்ளது.

தமது பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க அரசாங்கம் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று அந்த சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அளுத்கே கூறியுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும் போது அவர் இதனைக் கூறியுள்ளார்.